கோவா தேசிய வில்வித்தை போட்டியில் பதக்கங்கள் வென்ற திருப்பத்தூர் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு ஜோலால்பேட்டை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள “கிங்” வில்வித்தை அகாடாமியில் பயிற்சி மாணவ, மாணவிகளில் 17 பேர், கோவாவில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கங்களை வென்று அசத்தினர்.
சொந்த ஊர் திரும்பிய அவர்களுக்குப் பொதுமக்கள், பயிற்சி நிறுவனம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
















