மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனது 70 அடி சிலையைக் கால்பந்தாட்ட ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி திறந்து வைத்தார்.
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி மற்றும் அவரது அணியினர் கோட் இந்தியா டூர் எனும் பெயரில் இன்று முதல் 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
வணிக ரீதியிலான அடிப்படையில் கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் கொல்கத்தாவில் விஐபி சாலையில் உள்ள பூமி கடிகார கோபுரத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தனது 70 அடி உயர சிலையை மெஸ்ஸி திறந்து வைத்தார்.
இது உலகில் மெஸ்ஸிக்காக அமைக்கப்படும் மிக உயரமான சிலையாகும். இந்த சிலையை தான் தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்தபடியே காணொலி வாயிலாக மெஸ்ஸி திறந்து வைத்தார்.
















