சென்னை அம்பத்தூர் அருகே ஆந்திராவிற்குக் கடத்த முயன்ற 15 டன் ரேசன் அரிசியைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அத்திப்பட்டில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி அவர்கள், சோதனையிட்டனர். அதில் 15 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநர் மகாராஜன் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
















