அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.
இந்தியாவின் மாற்றத்துக்கான அணுசக்தி ஆற்றலின் மேம்பாடு என்ற பெயரிலான மசோதா கடந்த திங்கள்கிழமை மக்களவையில் அறிமுப்படுத்தப்பட்டது.
அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதியளிக்கும் மசோதா மீது மக்களவையில் புதன்கிழமை அனல்பறக்க விவாதம் நடைபெற்றது.
அதில், இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்க எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பரிந்துரைக்கப்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களில் ஒன்றான இந்த மசோதா 4 மணி நேர விவாதத்திற்கு பிறகு குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
















