வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம், பாதுகாப்பு காரணங்களுக்காகத் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள சில கிளர்ச்சியாளர்கள் இந்திய தூதரகத்தை நோக்கிப் பேரணி நடத்த முயன்றதாலும், சில தலைவர்கள் பொதுவெளியில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பேசி வருவதாலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகப் பணியாளர்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு இடைக்கால அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
















