இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன் பிடித்ததாக வங்கதேசத்தை சேர்ந்த 35 மீனவர்களை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது.
வங்காள விரிகுடாவில் சந்தேகத்திற்கிடமான 2 இழுவை படகுகளை கண்ட இந்திய கடலோர காவல்படையினர் உடனடியாக அங்குச் சென்று சோதனையிட்டனர்.
அப்போது சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரையும், அவர்களது இரண்டு மீன்பிடிப் படகுகளையும் இந்திய கடலோர காவல் படையினர் சிறைபிடித்து மேற்கு வங்க மாநிலம் ஃப்ரேசர்கஞ்ச் மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
















