அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்பு : சாந்தி மசோதாவின் சிறப்பம்சம் என்ன?
Jan 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்பு : சாந்தி மசோதாவின் சிறப்பம்சம் என்ன?

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 08:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் வகையில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்ன?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானது, அணுசக்தி தொடர்பான சாந்தி மசோதா. அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்கள்தொகை பெருக்கம், அதிகளவிலான தொழிற்சலைகள் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் நாளுக்கு நாள் மின்தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால், இந்தியாவின் மின்உற்பத்தி, அந்த தேவையை பூர்த்தி செய்யும் அளவில் இல்லை. எனவே, அணுஉலைகளை அதிகளவில் அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

நிலக்கரி உள்ளிட்டவை மூலம், மின்சாரம் தயாரிக்கப்படும்போது, கார்பன் டை ஆக்ஸைடு அதிகளவில் வெளியேறுகிறது. அவை சுற்றுசூழல் மாசடைவதற்கு காரணமாக அமைக்கின்றன. ஆனால், அணுஉலைகள் மூலம் ஆற்றலை உற்பத்தி செய்யும்போது, சுற்றுச்சூழல் மாசடையும் சதவீதம் மிகவும் குறைகிறது. எனவே, அணுஉலைகள் மூலம் உற்பத்தியாகும் ஆற்றல் தூய ஆற்றல் எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்த அணுஆற்றலை இந்தியாவில் மத்திய அரசு மட்டும்தான் உற்பத்தி செய்ய வேண்டும் என 1962ம் ஆண்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதுதான் இன்று வரை அமலில் உள்ளது. 2047ம் ஆண்டுக்குள் அணுஉலைகள் மூலம் 100 ஜிகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்வது என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. 100 ஜிவாவாட் என்பது இலக்காக இருந்தாலும், தற்போதுவரை 8.8 ஜிகாவாட் என்ற அளவில்தான் இந்தியாவின் அணுஆற்றல் உற்பத்தி உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் இலக்கை எட்ட வேண்டும் என்றால், கட்டாயம் தனியார் பங்களிப்பை அனுமதித்தே ஆக வேண்டும்.

அதேபோல, அணுஉலைகள் தொடர்பாக 2010ம் ஆண்டு மேலும் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி அணுஉலைகள் வெடித்தாலோ, அவற்றில் ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டாலோ, அதனை வழங்கிய நிறுவனங்கள்தான் முழுக்க முழுக்க பொறுப்பு என அந்தச் சட்டம் தெரிவித்தது. இதன் காரணமாக வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவுக்கு அணுஉலையை வழங்கத் தயக்கம் காட்டி வந்தன.

இந்தச் சூழலில், இந்த 2 சட்டங்களிலும் மத்திய அரசு தற்போது திருத்தம் கொண்டுவந்துள்ளது. மத்திய அரசு மட்டுமல்ல, இனி தனியார் நிறுவனங்களும் உணு உலைகளை அமைக்கலாம், நிர்வகிக்கலாம், அணுஆற்றலை உற்பத்தி செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அணுஆற்றல் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வது இதுவரை இயலாத காரியமாக இருந்து வந்தது. அதிலும் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அணுஆற்றல் துறையில் 49 சதவீதம் வரை அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அணுஉலைகளில் இனி ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால், அதனை விற்பனை செய்த நிறுவனங்களுக்குப் பதிலாக, அதனை நிர்வகிக்கும் நிறுவனங்கள்தான் பொறுப்பு எனப் புதிய சட்டம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு அணுஉலைகளை விற்பனை செய்ய முன்வரும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தியாவில் அமைக்கப்படும் அனைத்து அணுஉலைகள் அனைத்தும் கட்டாயம் காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும், அணுஉலைகள் சார்ந்து வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்பன போன்ற அம்சங்களும் புதிய சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தமாற்றங்கள்மூலம், 2047ம் ஆண்டுக்குள் இந்தியா 100 ஜிகாவாட் அணுஆற்றல் உற்பத்தி இலக்கை எட்டும் சூழல் உருவாகியுள்ளது.

Tags: அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதாPrivate participation in the nuclear energy sector: What is the highlight of the Shanti Bill?சாந்தி மசோதா
ShareTweetSendShare
Previous Post

உக்ரைனில் இந்திய போர் கைதி : வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட குஜராத் மாணவர்-பின்னணி?

Next Post

பரிதாப நிலையில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரங்கள் – தமிழக அரசின் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் தோல்வி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies