வட இந்தியாவில் இரண்டு நாட்களுக்குக் கடும்பனி நிலவும் என்பதால் விமானங்கள், ரயில்கள் சேவை பாதிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகக் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சாலை போக்குவரத்து மட்டுமல்லாது, விமான சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வட இந்தியா முழுவதும் 2 நாட்களுக்கு மூடுபனி நிலவும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், மூடுபனியின் தீவிரம் படிப்படியாகக் குறையக்கூடும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
திடீர் வானிலை மாற்றங்கள் காரணமாகச் சேவைகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறும் விமான நிறுவனங்கள் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளன.
















