மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்படுவதற்கு எதிரான வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கறிஞர்கள், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம், மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்படும் என அறநியைத்துறை அறிவித்தது.
மருதமலையில் முருகன் சிலை அமைத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிலை அமையவுள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்யக் குழு அமைத்து உத்தரவிட்டது. மேலும், ஜனவரி 23ஆம் தேதிக்குள் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிட்டது.
அதன்படி, மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து வழக்கறிஞர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
















