பாட்டில்களில் குடிநீரை அடைத்து விற்கும் நிறுவனங்கள், ஜனவரி 1 முதல் புதிய தரப்பரிசோதனை விதிகளை பின்பற்றுவது கட்டாயமென இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.
பாட்டில்களில் குடிநீரை அடைத்து விற்கும் நிறுவனங்கள், இந்திய தர நிர்ணய அமைப்பிடம் பி.ஐ.எஸ். சான்றிதழ் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையிடம் இருந்து விற்பனைக்கான உரிமம் பெறுவது கட்டாயமாக இருந்தது.
கடந்தாண்டு பி.ஐ.எஸ்., சான்றிதழ் கட்டாயம் என்பதை நீக்கியதோடு, பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர், மினரல் குடிநீர் ஆகியவற்றை, அதிக ஆபத்துமிக்க தயாரிப்பு பிரிவாக எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வகைப்படுத்தி இருந்தது.
இந்நிலையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட உத்தரவில், பாட்டில்களில் குடிநீரை அடைத்து விற்கும் நிறுவனங்கள் புதிய தரப்பரிசோதனை முறைகளை பின்பற்றுவது ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குடிநீரில் உள்ள நுண்கிருமிகள் தொடர்பான அளவீடு மாதம் ஒருமுறை கட்டாயம் பரிசோதிக்கப்படுவதோடு, பிற அளவீடுகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















