சென்னை பனையூரில் தவெக தலைவர் விஜய்யின் காரை அக்கட்சியின் பெண் நிர்வாகி வழி மறித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
தவெகவில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற பொறுப்புகளுக்கு இறுதிக் கட்ட நிர்வாகிகள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாகத் தூத்துக்குடியை சேர்ந்த அஜித்தா என்ற பெண் நிர்வாகி மாவட்ட செயலாளர் பொறுப்பை எதிர்பார்த்து காத்திருந்துள்ளார்.
ஆனால் அந்தப் பொறுப்பு வேறு ஒருவருக்கு வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானதால் அஜித்தா அதிருப்தி அடைந்தார். அவர் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு வந்த தவெக தலைவர் விஜய்யின் காரை, அஜித்தா தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வழிமறித்தார். இருப்பினும் பாதுகாப்பு காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தியதால் அங்குப் பதற்றம் நிலவியது.
















