டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பயணியைத் தாக்கிய ஏர் இந்தியா விமானி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் அங்கித் திவான் என்ற பயணியை, ஏர் இந்தியா விமானி வீரேந்தர் செஜ்வால் கடுமையாகத் தாக்கினார்.
இதில் பாதிக்கப்பட்ட பயணி அங்கித் திவான் ரத்தம் வழிந்த நிலையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் விமானி வீரேந்தர் செஜ்வாலை ஏர் இந்தியா பணி நீக்கம் செய்தது.
இந்நிலையில் விமானி வீரேந்தர் செஜ்வாலுக்கு எதிராக 3 பிரிவுகளின் கீழ் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
















