பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் சைபர் தாக்குதல்கள் காரணமாக அஞ்சல் மற்றும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
ஐரோப்பிய நாடான பிரான்சில், கிறிஸ்துமஸ் பண்டிகை பரபரப்புக்கு நடுவே, தேசிய அஞ்சல் சேவையான லாப்போஸ்ட் மற்றும் அதன் வங்கி பிரிவான லா பேங்க் போஸ்டல் ஆகியவற்றின் ஆன்லைன் சேவைகள் சைபர் தாக்குதல் காரணமாக முடக்கப்பட்டன.
ஆன்லைன் சேவை முடக்கத்தால், பார்சல்கள் அனுப்புவதிலும், அதனை பெறுவதிலும் தாமதமும், தடைகளும் ஏற்பட்டன.
இந்தச் சைபர் தாக்குதலால், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும், இது இணையதளத்தின் சர்வர்களை முடக்கி சேவைகளைப் பயன்படுத்த முடியாதவாறு செய்யும் ஒரு வகை தாக்குதல் எனவும் அஞ்சல் துறை உறுதி செய்துள்ளது.
















