ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து 5ஆம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் சௌரி கொண்டை சாற்றியும், ஆபரணங்கள் அணிந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 20ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் விமரிசையாக தொடங்கியது. நாள்தோறும் நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.
இந்நிலையில், பகல் பத்து 5ஆம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் சௌரி கொண்டை சாற்றியும், தங்க வைர ஆபரணங்கள் அணிந்து கொண்டும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
கோயில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















