முதன்மைச் செயலாளர்களாக பதவி வகித்து வந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், தமிழகத்தில் 1995ஆம் ஆண்டு பிரிவில் தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதித்துறை முதன்மைச் செயலாளரான உதயச்சந்திரன், தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்தி, பொருளாதாரம மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் ஆர்.ஜெயா ஆகியோருக்கும் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார், டிட்கோ தலைவர் சந்தியா வேணுகோபால் உள்ளிட்ட 7 பேருக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக், முதலமைச்சர் தனிச்செயலாளர் சண்முகம் உள்ளிட்ட 6 பேர் முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
















