வங்கதேசத்தில் ஹிந்துக்கள்பாதுகாப்பாக வாழ முடியவில்லை, ஆனாலும் நாம் அமைதியாக இருக்கிறோம் என சுவாமி மித்ரானந்தா கூறியுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள சின்மயா மிஷன் அரங்கில் ‘சனாதன தமிழர் 2025’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய சுவாமி மித்ரானந்தா, ஹிந்துக்கள் ஒன்றிணைந்து ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும் எனவும் அயோத்தி எப்படியோ, அதைப்போல் திருப்பரங்குன்றம் இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் பாதுகாப்பாக வாழ முடியவில்லை, ஆனாலும் நாம் அமைதியாக இருக்கிறோம் ஹிந்து மக்கள் தவத்தில் இருக்கிறார்கள், அவர்களை எழுப்ப வேண்டும் என தெரிவித்தார்.
















