வெற்றிப்பாதையில் தலைமுடி உதிர்வு தடுப்பு மருந்து : வழுக்கை பிரச்னைக்கு விரைவில் தீர்வு வருகிறது புதிய மருந்து!
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெற்றிப்பாதையில் தலைமுடி உதிர்வு தடுப்பு மருந்து : வழுக்கை பிரச்னைக்கு விரைவில் தீர்வு வருகிறது புதிய மருந்து!

Murugesan M by Murugesan M
Dec 26, 2025, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண்களின் தலைமுடிவு உதிர்வை தடுப்பதற்கான மருந்து, 3ம் கட்ட சோதனையிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், அதன் தயாரிப்பு நிறுவனத்தின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஆண்களுக்குப் பல பிரச்னைகள் இருந்தாலும், அதில் தலையாயது தலைமுடி பிரச்னைதான். இளம்வயதிலேயே முடிஉதிர்வதால் பலருக்கு வயதான தோற்றம் ஏற்படுகிறது. திருமணத்திற்கு பெண் கிடைப்பதிலும் சிக்கல் உருவாகிறது. பல சமயங்களில் முடிஉதிர்தல் தாழ்வு மனப்பான்மைக்கும் வித்திடுகிறது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இந்த முடிஉதிர்வு பிரச்னையால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதற்குத் தீர்வு காண உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

இருந்தபோதும், எந்த நிறுவனமும் இதுவரை சொல்லிக்கொள்ளும்படியான பரிசோதனை முடிவை எட்டியதில்லை. இந்தச் சூழலில்தான், அயர்லாந்தை சேர்ந்த காஸ்மோ பார்மசூடிகல்ஸ் என்ற நிறுவனம் முடிஉதிர்தலை தடுப்பது குறித்த ஆய்வில் களமிறங்கியது.

இதற்காக, தலைமுடி இல்லாத 1,500 ஆண்களை தேர்ந்தெடுத்த அந்நிறுவனம், அவர்களுக்கு Blacebo, Clascoterone என்ற 2 மருந்துகளை வழங்கி ஆய்வு மேற்கொண்டது. இதில், Clascoterone மருந்து நல்ல பலனை கொடுக்கத் தொடங்கியுள்ளது. முதல் இரண்டு கட்ட சோதனைகள் வெற்றிப்பெற்றிருந்த நிலையில், தற்போது நடத்தப்பட்ட 3ம் கட்ட சோதனையும் எதிர்பார்த்த நல்ல முடிவை கொடுத்துள்ளது. இதனால் காஸ்மோ பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர தொடங்கியுள்ளது. பல தசாப்தங்களாகவே, தலைமுடி உதிர்வுக்கான சிகிச்சை உலகளவில் மிகப்பெரிய சந்தையாக இருந்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் மட்டும் இதற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், காஸ்மோ பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தின் மருந்து விற்பனைக்கு வரும்பட்சத்தில், அது வர்த்தக உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உணர்ந்த முதலீட்டாளர்கள் தற்போது முதலே, அந்நிறுவனத்தில் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், அதன் பங்கு மதிப்பு தற்போது 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காஸ்மோ நிறுவனம், தலைமுடி உதிர்வு தடுப்பு மருந்தின் 12 மாதகால பாதுகாப்பை உறுதிபடுத்துவதுதான் தங்களின் அடுத்த இலக்கு எனத் தெரிவித்துள்ளது. அதிலும் வெற்றிப்பெற்றுவிட்டால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒப்புதலை பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளது.

இதனிடையே, மருந்து உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பிற பெரிய நிறுவனங்களின் பங்களிப்பை பெறவும், காஸ்மோ பார்மசூடிகல்ஸ் நிறுவனம் முயன்று வருகிறது. அதற்கான தொடர் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

Clascoterone மருந்து முழு வெற்றிப்பெற வேண்டும் என்பதில், அதன் தயாரிப்பு நிறுவனத்தை விட, உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த ஆண்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். தலைமுடி உதிர்வை தடுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், அதுதான் மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்பாக இருக்கும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags: Hair loss prevention medicine on the road to success: A new medicine is coming soon to solve the problem of baldness!
ShareTweetSendShare
Previous Post

அறிவியல், தர்மம் இடையே முரண்கள் இல்லை – மோகன் பாகவத்

Next Post

தொடரும் இந்துக்கள் இனப்படுகொலை : வங்கதேசத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் அட்டுழியம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies