நெல்லை மாவட்டம் களக்காட்டை அடுத்த திருக்குறுங்குடி வனப்பகுதியில் நீர்நிலை பறவைகளைக் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
வனத்துறை ஊழியர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 30 பேர் கொண்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கூழ கிடா, மூக்குழிப்பான், மீசையால், அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இந்த வனப்பகுதியில் வசிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
















