நீதிமன்ற உத்தரவையும் மீறி தருமபுரி பாரதிபுரத்தில் கோயில் முன்பிருந்த பழமையான அரச மரம் அகற்றப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திமுக பிரமுகரும் மருத்துவமருமான சரோஜினியின் மருத்துவமனையை மரம் மறைத்ததால் அதனை அவரின் ஆதரவாளர்கள் வெட்டியதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி மரத்தை வெட்டிய திமுக நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர்.
















