மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கான பாதுகாப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு ஆளும் திரிணமூல் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வாலுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தது.
இதன் காரணமாக ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டதால் ஆயுதம் ஏந்திய 12 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
















