புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆண்டிக்கான்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் குமார் ஆகியோர், காயம்பட்டி பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். படுகாயமடைந்த குமார் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே காயம்பட்டி பகுதி வழியாகக் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்ல அனுமதிக்கப்படுவதே விபத்துக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
















