மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை இடையே நிறுத்தப்பட்டு இருந்த மலை ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட்டது.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு கல்லார் மற்றும் ஹில்கிரோ ரயில் நிலையங்கள் இடையே திடீரென மண் சரிவு ஏற்பட்டது. ரயில் பாதையில் மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்ததால் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்பட்ட ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பபட்டது.
இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்த நிலையில் இடர்பாடுகளை அகற்றி தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகளை ஊழியர்கள் நிறைவு செய்தனர். இதனால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மலைரயில் சேவை மீண்டும் இயக்கப்பட்டது.
















