சென்னையில் கஞ்சா விற்பனை செய்து வந்த பெண்ணை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கண்ணகிநகர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தீவிர சோதனை நடத்திய போலீசார், கஞ்சா விற்பனை செய்ததாக சரண்யா என்பவரை கையும் களவுமாக கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவையும் கைப்பற்றினர். விசாரணையில் பல மாதங்களாக சரண்யா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், அவர் மீது 15 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
அத்துடன் சரண்யா B கிரேடு சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
















