தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அறிவுறுத்தல் நிராகரிக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் தொடங்கும். அதன்படி, நடப்பாண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. .
இதில், பங்கேற்று உரை நிகழ்த்த சென்ற ஆளுநரை சாநாயகர அப்பாவு பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையையும் ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து தேசிய கீதம் பாடாததால் அவையில் இருந்து ஆளுனர் ஆர்.என்.ரவி உரையை படிக்காமல் அவையில் இருந்து புறப்பட்டு சென்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தேசிய கீதமும் இசைக்க வேண்டும் என கடந்த ஆண்டே ஆளுநர் ரவி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து ஆளுநர் ரவியின் ஆங்கில உரையை அப்பாவு தமிழில் வாசிக்கத் தொடங்கினார்,
















