கம்பிகள் இல்லாமல் வயர்லெஸ் மின் விநியோகம் - ஃபின்லாந்து புதிய சாதனை
Mar 15, 2026, 02:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கம்பிகள் இல்லாமல் வயர்லெஸ் மின் விநியோகம் – ஃபின்லாந்து புதிய சாதனை

Manikandan by Manikandan
Jan 21, 2026, 09:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கம்பிகள் இல்லாமல் காற்றிலேயே மின்சாரத்தை கடத்தி மின் விநியோகம் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது ஃபின்லாந்து

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட காலம் தொட்டு, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மின்சாரத்தை கடத்த உலோகக் கம்பிகளே இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நீர், காற்று, சூரிய ஆற்றல், அணுமின் ஆற்றல் உள்பட பல்வேறு வழிகள் மூலம் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டபோதும், மின் கடத்திகள் உலோகக் கம்பிகளாகவே இருந்து வருகின்றன…. இந்த சூழலில் ஃபின்லாந்து விஞ்ஞானிகள் மாபெரும் தொழில்புரட்சியை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்…

ஃபின்லாந்தின் HELSINKI பல்கலைக்கழகம், OULU பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்களாக மாறியுள்ளனர்…காற்றில் மின்சாரத்தை கடத்துவதற்கான புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்…இதிலுள்ள முக்கியமான அம்சம் என்னவென்றால், High-intensity Ultrasonic Waves காற்றில் ஒரு கண்ணுக்கு தெரியாத பாதையை உருவாக்குவதுதான்…

இதுபோன்ற ultrasonic waves காற்றில் ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தை உருவாக்கி, அவ்வழியாக மின்சாரத்தை சிந்தாமல், சிதறாமல் நேர்கோட்டில் வழிநடத்துகின்றன… இது ஒரு மாயக் கம்பி போன்று செயல்படுவதால், இதற்கு Acoustic Wire என்று பெயரை விஞ்ஞானிகள் வைத்துள்ளனர்… ஒலி அலைகள் மட்டுமின்றி, ஒளியை பயன்படுத்தி மின்சாரத்தை கடத்தும் தொழில்நுட்பத்திலும் ஃபின்லாந்து முன்னேற்றம் கண்டுள்ளது.
Power-by-Light எனப்படும் இந்த முறையில், அதிநவீன லேசர் கதிர்கள் மூலம் மின்சாரம் தொலைவில் உள்ள Receivers களுக்கு அனுப்பப்படுகிறது.

அணுமின் நிலையங்கள் மற்றும் உயர் மின்னழுத்த நிலையங்கள் போன்ற ஆபத்தான இடங்களில், கம்பிகள் மூலம் மின்சாரத்தை கடத்துவது விபத்துகளுக்கு வழிவகுக்கும். லேசர் தொழில்நுட்பம் அங்கே பாதுகாப்பான மின் கடத்தலை உறுதி செய்கிறது. மின்சார அதிர்ச்சிகள் ஏற்படாமல் தடுக்க இது ஒரு சிறந்த தீர்வாகவும் பார்க்கப்படுகிறது. இதற்கு இணையாக, காற்றில் ஏற்கனவே மிதந்துகொண்டிருக்கும் ரேடியோ அலைகளை மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பமும் வளர்ந்து வருகிறது. இது ‘Wi-Fi for power’ என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான சிறியசென்சார்களுக்குத் தேவையான மின்சாரத்தைக் காற்றிலிருந்தே பெற முடியும். இதற்காகத் தனியாக பேட்டரிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது, இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும். தற்போது இந்தத் தொழில்நுட்பங்கள் ஆய்வக அளவிலும், சோதனைக் கட்டத்திலும் இருந்தாலும், இவை எதிர்கால உள்கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்கக் கூடியவை.

வயர்லெஸ் சார்ஜிங் என்பது மின்காந்த புலங்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது… தற்போது ஃபின்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கும் தொழில்நுட்பம் வயர்லெஸ் வைஃபை-ஐ ஒத்ததாக உள்ளது… ஹெல்சின்கி பல்கலைக்கழக ஆராய்ச்சியின்படி, காந்த வளைய ஆண்டனாக்கள், குறைந்த தூரங்களுக்கு இடையில் அதிக செயல்திறனுடன் வயர்லெஸ் முறையில் மின்சாரத்தை கடத்த முடியும் என்று கூறப்படுகிறது…

ஃபின்லாந்தின் அபார கண்டுபிடிப்பு, ஒரு வைஃபை ரூட்டர் போன்று செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உலக நாடுகளும் புதிய தொழில்நுட்பத்தின் செயல்பாட்டை உற்று நோக்கி வருகின்றன…

Tags: worldFinland achievesFinlandwiresWireless power transmission
ShareTweetSendShare
Previous Post

மேற்காசியாவில் மோடியின் புதிய அரசியல் – அமீரக அதிபரின் 3 மணி நேர இந்திய வருகை பின்னணி!

Next Post

கர்நாடக டிஜிபி சஸ்பெண்ட் ஏன்? – பெண்களிடம் ஆபாசமாக நடந்த வீடியோ வைரல்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies