செங்கல்பட்டு மாவட்டம், திரூநீர்மலை அருகே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து டயர் வெடித்ததால் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. 20 பயணிகளுடன் புறப்பட்ட இந்த பேருந்து திருநீர்மலை அருகே வந்தபோது முன்பக்க டயர் வெடித்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனைக்கண்ட வாகன ஓட்டிகள் பேருந்தில் இருந்த பயணிகளை சிறுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ததுடன் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















