அம்பத்தூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும் ஜோலார்பேட்டை விரைவு ரயிலை பாஜகவினர் மலர்தூவி வரவேற்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் ஜோலார்பேட்டை வரை செல்லும் ஜோலார்பேட்டை விரைவு ரயில் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகனின் முயற்சியால், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை விரைவு ரயில் நின்று செல்லும் உத்தரவை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பிறப்பித்தார்.
இதனடிப்படையில், அம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த ஜோலார்பேட்டை விரைவு ரயிலை பாஜகவினர் மலர்தூவி வரவேற்றனர்.
ரயிலை இயக்கி வந்த லோகோ பைலட்டிற்கு பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் சால்வை போர்த்தி மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
















