நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள், வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்ற நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார், சர்வதேச, பிராந்திய கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.
















