திருப்பதி ஏழுமலையானுடன் விளையாடினால் தண்டனை நிச்சயம் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், திருமலையின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டவர்கள், அதன் விளைவுகளை இந்த ஜென்மத்திலேயே அனுபவிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
முதலமைச்சராக இருந்தாலும், ஸ்ரீவாரி முன்னிலையில் தான் ஒரு சாதாரண பக்தன் மட்டுமே என்று குறிப்பிட்ட அவர், திருமலையின் புனிதத்தைக் காக்கும் விஷயத்தில் எக்காரணம் கொண்டும் பின்வாங்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
















