தனது மகன் மீது பொய் புகாரளித்த நிகிதாவை உடனடியாக கைது செய்ய வேண்டுமென, உயிரிழந்த அஜித்குமாரின் தாயார் வலியுறுத்தி உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித்குமாரின் தாயார் மாலதி, தனது மகன் திருடன் இல்லையென நீதிமன்றம் கூறியது ஆறுதலாக உள்ளதாகவும், எந்த குற்றமும் செய்யாத தனது மகனை போலீசார் அடித்து கொன்று விட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது மகன் நகைகளை எடுக்கவில்லை என்பது தனக்கு நன்கு தெரியும் எனக்கூறிய அவர், அஜித் குற்றமற்றவன் என்பதை இந்த உலகம் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டப்போராட்டம் என்றும் தெரிவித்தார்.
















