தருமபுரியில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவசரகதியில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தருமபுரி மையப் பகுதியில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையத்தை மக்கள் தொகை அதிகரிப்பால் வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. 2021ல் சேலம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தனியார் இடத்தில் 40 கோடி செலவில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வந்தது.
தருமபுரி புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்த நிலையில், பேருந்து நிலையத்தில் அடிப்படைகள் வசதிகள் எதுவும் இன்றி அவசரகதியில் திறக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பழைய பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளதாகவும், மேலும், வெற்று விளம்பரத்திற்காக நகராட்சி பேருந்து நிலையத்தை தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்துள்ளதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
















