வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறித்து 3 நாள் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின் வட்டி விகிதம் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 5.25 சதவீதமாக நீடிக்கும் என தெரிவித்தார்.
அதேபோல் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்தியா, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை ஏற்றுமதியை அதிகரிக்க வழி வகுக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் அடுத்த நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டிற்கான பொருளதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
















