பாகிஸ்தானுக்கு இந்தியா "செக்" -அரபு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்!
Jun 24, 2026, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானுக்கு இந்தியா “செக்” -அரபு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்!

Manikandan by Manikandan
Feb 6, 2026, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆறு நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடன் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆண்டின் தொடக்கமே தொடக்கமே இந்தியாவுக்கு வெற்றி செய்தியாகவே உள்ளது. முதலில் ஐரோப்பிய யூனியனுடன் வரலாற்று சிறப்பு மிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

அடுத்த சில நாட்களிலேயே, இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் விதிகளுக்கு ஏற்பவே இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அறிவித்தார்.

உலமெங்கும் தனது வர்த்தக உறவுகளை விரைவுபடுத்தி வரும் இந்தியா, தற்போது சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய ஆறு உறுப்பு நாடுகளைக் கொண்ட அரபு நாடுகளின் கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறைகள் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளது.

2004-ல் முதன்முதலில் ஜிசிசியுடன் தொடங்கப்பட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகள் 2011-ல் நிறுத்தப்பட்டது. மீண்டும் 2022-ல் இருநாடுகளும் வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதாக அறிவித்தன. 2023-ல் ஜிசிசி விதிமுறைகள் ஆவணத்தின் திருத்தப்பட்ட வரைவு வெளியிடப்பட்டது. தொடர்ந்து இரு தரப்பினரும் பேசி வந்த நிலையில், இப்போது ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

ஜிசிசி-யுடனான வர்த்தக ஒப்பந்தம் உணவு பதப்படுத்துதல், உள்கட்டமைப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் போன்ற துறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 2021ம் ஆண்டு முதல் ஜிசிசி-இந்திய இருதரப்பு வர்த்தகம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

2021-2022 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கும் ஜிசிசி-க்கும் இடையிலான வர்த்தகம் சுமார் 155 பில்லியன் டாலராக இருந்தது. இதில் இறக்குமதி 110.7 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 43.9 பில்லியன் டாலராகவும் இருந்தது.

அதற்கடுத்த ஆண்டு, இந்த வர்த்தக மதிப்பு சுமார் 185 பில்லியன் டாலராக அதிகரித்தது. இதில் இறக்குமதி 133.2 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 51.3 பில்லியன் டாலராகவும் இருந்தது.

அதற்கும் அடுத்த ஆண்டில், இந்த வர்த்தக மதிப்பு மீண்டும் உயர்ந்து 162 பில்லியன் டாலராக இருந்தது.

கடந்த ஆண்டு, இது 179 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில் இறக்குமதி 121.7 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 56.9 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது.

மீண்டும் தொடங்கியுள்ள பேச்சுவார்த்தைகள் முடிவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், இந்த வர்த்தகம் இன்னும் பன்மடங்கு அதிகமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஏற்கெனவே ஜிசிசி உறுப்பு நாடுகளுடன் தனித் தனியே இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. 2022-ல் ஐக்கிய அரபு அமீரகத்துடனும், கடந்த டிசம்பரில் ஓமனுடன் விரிவான பொருளாதார கூட்டுறவுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

சவூதி அரேபியாவும் பாகிஸ்தானும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில் ஜிசிசி நாடுகளுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் இந்தியா தொடங்கி இருப்பது, பாகிஸ்தானை ஜிசிசி உறுப்பு நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தும் யுக்தி என்றும் கூறப்படுகிறது

Tags: United Arab EmiratesFree Trade Agreement.Bahrain.negotiationssix-nation Gulf Cooperation Councilresumed long-pendingIndiasaudi arabiaOmanQatar
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரியில் 8 % ஒட்டு வைத்து உள்ள திமுக தலைமை தாங்குமா? -மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!

Next Post

20 மணிநேர வேட்டை – ராணுவத்தால் கொல்லப்பட்ட JeM பயங்கரவாதி ஆதில்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies