புளியரை அருகே உள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திர திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம், புளியரை பகுதியில் உள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் தட்சணாமூர்த்தி சன்னதியில் கடந்த 31ஆம் தேதி தை உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் குருவுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தவசு காட்சி நிகழ்ச்சியை ஒட்டி தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, திருக்கல்ணாய வைபவம் கோலாகலமாக நடந்தது. பின்னர், சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















