உலக நாடுகளின் புள்ளி விவரங்களை வழங்கும், தி வேர்ல்ட் ஃபேக்டர் புக் தகவல் வெளியீட்டு சேவையை நிறுத்துவதாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ அறிவித்துள்ளது.
கடந்த 1962ல், அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளின் ரகசியப் பயன்பாட்டு ஆவணமாக தி வோ்ல்ட் ஃபேக்ட்புக் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒரு நாட்டின் பொருளாதார நிலை, ராணுவ பலம், இயற்கை வளங்கள், சமூகக் கட்டமைப்பு போன்றவை குறித்த மிக துல்லியமான தகவல்கள் இதில் இடம்பெற்றிருந்தன.
பின்னா், 1997-இல் வலைதளமாக உருவெடுத்த பிறகு, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மாணவா்கள் மற்றும் பத்திரிகையாளா்களுக்கு இது ஒரு தவிா்க்க முடியாத தகவல் ஆதாரமாக மாறியது.
இந்நிலையில், தற்போது இதன் வெளியீடு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திடீா் முடிவுக்கான அதிகாரப்பூா்வ காரணத்தை சிஐஏ இன்னும் தெரிவிக்கவில்லை.
















