மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முதல் அறுவடை நெல்லை, பாரம்பரியமாக அழகர் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனுார் கிராமத்தில் ஆண்டின் முதல் அறுவடை நெல், மதுரை அழகர் கோயிலுக்கு அனுப்பு வழக்கம். அதன்படி நடப்பாண்டின் முதல் அறுவடை நெல்லை, விவசாயிகள் கையாலேயே அறுவடை செய்து, தேனுார் மலையன் சாவடிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதல்படி நெல்லுக்கு தீபாராதனை காண்பித்து விவசாயிகள் வழிபட்டனர். பின்னர் விவசாயிகள் நெல்லை கள்ளழகர் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர்.
















