திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் மீது தம்பி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அண்ணனை, தம்பி கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினார்.
இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















