நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பூமி பூஜைக்கு வந்த எம்எல்ஏ ஈஸ்வரனை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் சேகரமாகும் திடக்கழிவு குப்பைகளை பயோமைனிங் முறையில் அகற்ற 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்பதற்காக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈஸ்வரன் வருகை தந்தார். அப்போது அவரை முற்றுகையிட்ட மக்கள், திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
















