மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமரிடம் புகைப்படம் வழங்கிய சிறுமியை அண்ணாமலை நேரில் பாராட்டினார்.
கடந்த மாதம் 23ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் NDA பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது மதுரையை சேர்ந்த சிறுமி ஒருவர், பிரதமர் மோடியின் தாயார் உருவப்படத்தை வரைந்து அவருக்கு வழங்கினார்.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, சிறுமியை அழைத்து பாராட்டினார்.
















