தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்ற பிறகு என்டிஏ கூட்டணிக்கு உத்வேகம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் என்டிஏ கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளதாகவும் அவர் கூறினார்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது மேடைகளில் பெண்களை இழிவுபடுத்தி திமுகவினர் பேசினர் என்றும், தற்போது மீண்டும் பெண்களை இழிவுபடுத்தி திமுகவினர் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெண்களை இழிவுபடுத்தி பேசுவது திமுகவுக்கு மிகப்பெரிய இழப்பாக அமையும் என்றும் தேர்தல் நேரத்தில் அவசரகதியில் திமுக அரசு கோயில்களில் கும்பாபிஷேகங்களை நடத்துவதாகவும் அவர் கூறினார்.
புனரமைப்பு பணிகள் முடியாமல் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது ஆட்சிக்கு நல்லதல்ல என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
















