உலக அளவிலான போட்டிகளுக்கு கிராமங்களில் இருந்து வீரர்களை உருவாக்கும் வகையில் தமிழகத்தில் 48 இடங்களில் நமோ மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக பாஜக மாநில விளையாட்டு பிரிவு தலைவர் நயினார் பாலாஜி தெரிவித்துள்ளார்.
நமோ யூத் பவுண்டேஷன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு பிரிவு சார்பில் இன்று சேலத்தில் மராத்தான் போட்டிகள் நடைபெற்றது.இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக பாஜக மாநில விளையாட்டு பிரிவு தலைவர் நயினார் பாலாஜி தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். தமிழகத்தில் 48 இடங்களில் நமோ மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
கிராமங்களில் இருந்து வீரர்களை தயார் செய்வதே நோக்கம் என்றும் அவர் கூறினார். உலக அளவிலான போட்டிகளுக்கு கிராமப்புற இளைஞர்களை தயார் செய்ய முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.
















