சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கினால் அந்த விருதின் கௌரவம் மேலும் உயரும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்தை, சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் வரவேற்றுள்ளார்.
வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் நீண்டகால கோரிக்கையாகும். அண்மையில் அவரது சிலையை அந்தமானில் திறந்து வைத்து சாவர்க்கரின் தியாகங்களை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நினைவு கூர்ந்தார்.
சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கினால் அந்த விருதின் கௌரவம் மேலும் உயரும் என்றும் மோகன் பாகவத் கூறினார்.
இந்நிலையில், மோகன் பாகவத்தின் கருத்துக்கு சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மோகன் பாகவத்தின் கருத்துடன் தான் முழுமையாக உடன்படுவதாகவும், சாவர்க்கரை கௌரவிக்க இதைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்றும் கூறினார்.
















