திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் உலக இந்து கல்வியாளர்கள் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் தமிழகம் மட்டுமன்றி, பிற மாநிலங்களில் இருந்தும் முனைவர் பட்டம் பெற்ற இந்து கல்வியாளர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் இந்து கோயில்கள் மற்றும் இந்துக்களின் நிலைமை குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இந்து மத சித்தாந்தம் குறித்தும் அதற்கு எதிராக செயல்படும் திராவிட அரசு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து கருத்தரங்கில் நான்கு வேதங்கள் குறித்து சுவாமி ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில பாரத இணை பொதுச் செயலாளர் ஸ்ரீமான் ஸ்தான மாலையான் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் பாழடைந்து பராமரிப்பின்றி இருப்பதாக குற்றம்சாட்டினார்.
















