கொலை, கொள்ளை, கஞ்சா புழக்கத்தில் தான் தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக இருப்பதாக பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,திமுக ஆட்சி தோல்விகளில்தான் நம்பர் ஒன் என தெரிவித்தார். திமுக ஆட்சியில் தமிழகம் டாஸ்மாக் வருமானத்தில் நம்பர் ஒன் என்றும், தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியில் தமிழகம் நம்பர் ஒன் என்றும் கூறினார்.
அதிக கடன் சுமையில் தமிழகம் நம்பர் ஒன் என்றும், வெளிநாடுகளுக்கு போனோம் என்று வெற்று பேப்பரில் பொய் சொல்வதில் திமுக அரசு நம்பர் ஒன் என்றும் அவர் தெரிவித்தார்.இப்படி தோல்விகளால்தான் ஸ்டாலினின் திமுக பிராந்திய ஆட்சி நம்பர் ஒன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
















