தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய துணைத் தேர்தல் ஆணையர் இன்று தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் வரும் 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்தும், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்ய துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு இன்று சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
















