பன்னுன் கொலை முயற்சி வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தடை செய்யப்பட்ட நீதிக்கான சீக்கியா்கள் என்ற அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், பயங்கரவாத குற்றச்சாட்டில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா்.
அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்ற இவரை, அமெரிக்காவில் கொலை செய்ய சதி நடந்ததாகவும், இதில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்புள்ளதாகவும் அந்நாட்டின் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடா்பாக இந்தியரான நிகில் குப்தா கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர் தன்னுடைய குற்றத்தை அமெரிக்க நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
















