காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், தடையை மீறி ட்ரோன் கேமரா பறந்ததால் பாதுகாப்புப் படையினர் அதனைச் சுட்டு வீழ்த்தினர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சந்தை திடலில் நல்லாட்சி தொடரட்டும், புதுவை மலரட்டும் என்ற தலைப்பில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அப்பகுதியில் ட்ரோன் ஒன்று பறந்து கொண்டிருந்தது. இதனையடுத்து அந்த ட்ரோன் கேமராவை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
இது தொடர்பாக ட்ரோன் கேமராவை இயக்கிய திருநள்ளாறு பகுதியை சேர்ந்த ஸ்டூடியோ உரிமையாளர் யோகேஷ் என்பவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
















