எழில்கொஞ்சும் புளியஞ்சோலை - கண்டுகொள்ளாத அரசு : சுற்றுலாப்பயணிகள் வேதனை!
Apr 21, 2026, 06:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எழில்கொஞ்சும் புளியஞ்சோலை – கண்டுகொள்ளாத அரசு : சுற்றுலாப்பயணிகள் வேதனை!

Manikandan by Manikandan
Feb 14, 2026, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமான புளியஞ்சோலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளளர்.

திருச்சியில் இருந்து 72 கி.மீ தொலைவிலும், துறையூரில் இருந்து 27 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது புளியஞ்சோலை பகுதி. அடர்ந்த காடுகள், இரைச்சலற்ற சூழல், தூய்மையான காற்று, குளிர்ச்சியான நீரோடை என சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த இடம் அமைந்துள்ளது.

கொல்லிமலை அடிவாரத்தில் புளியஞ்சோலை அமைந்துள்ளதால், இங்குள்ள நீரூற்றுகள் ஆண்டு முழுவதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.மேலும், பல மூலிகை மரங்களையும், செடிகளையும் கடந்து தண்ணீர் வருவதால், அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, இங்கு குளிக்கவும், குடும்பத்துடன் நேரம் செலவிட்டு மகிழவும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புளியஞ்சோலைக்கு வருகை தருவது வழக்கம்.

குறிப்பாக கோடை காலங்களில் வெம்மையில் இருந்து தப்பவும், குளிர்ச்சியான தண்ணீரில் நீராடவும், உள்ளூரில் இருந்து மட்டுமல்லாமல், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். புளியஞ்சோலை சுற்றுலாத்தலம் தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான பல அடிப்படை வசதிகள் இங்கு இல்லாமல் உள்ளது. குறிப்பாக, பெண்கள் உடை மாற்ற எந்த அறையும் இல்லை.

அதேபோல், புளியஞ்சோலை சுற்றுலாத்தலத்தில் குடிநீர் வசதியும், கழிப்பறை வசதியும் உரிய முறையில் செய்து தரப்படவில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர். குப்பைகள் சரிவர அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதாக கூறும் அவர்கள், நடைபாதைகளை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடைக்காலத்தில் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால், அதற்கு முன்பாகவே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், அங்குள்ள வியாபாரிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: PULIYANCHOLAItn tourismTouristTiruchytourist placeKOLLI HILL PULIYANCHOLAI
ShareTweetSendShare
Previous Post

13 வயது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கிறார் கிம் ஜாங் உன்?

Next Post

காரைக்கால் அமித் ஷா நிகழ்ச்சியில் தடையை மீறி பறந்த ட்ரோன் – பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்!

Related News

கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்று பணம் திமுகவினர் – எதிர்கட்சிகள் சாலை மறியல்!

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

மகளிர் மசோதா தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – வானதி சீனிவாசன்

அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் – திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வலியுறுத்தல்!

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

சாத்தூர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை – சாலையோர உணவகத்தில் பூரி சுட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைய வேண்டும் – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

இன்றைய தங்கம் விலை!

இந்தியா, இலங்கை கூட்டாண்மையால் பொருளாதாரம் விண்ணை தொடும் – குடியரசுத்துணைத்தலைவர் சிபிஆர்

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி – மத்திய அரசு விளக்கம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் – கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ரூ.5000 கோடி மேல் ஊழல் – ராஜ்நாத்சிங்

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies