எழில்கொஞ்சும் புளியஞ்சோலை - கண்டுகொள்ளாத அரசு : சுற்றுலாப்பயணிகள் வேதனை!
Jul 13, 2026, 04:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எழில்கொஞ்சும் புளியஞ்சோலை – கண்டுகொள்ளாத அரசு : சுற்றுலாப்பயணிகள் வேதனை!

Manikandan by Manikandan
Feb 14, 2026, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமான புளியஞ்சோலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளளர்.

திருச்சியில் இருந்து 72 கி.மீ தொலைவிலும், துறையூரில் இருந்து 27 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது புளியஞ்சோலை பகுதி. அடர்ந்த காடுகள், இரைச்சலற்ற சூழல், தூய்மையான காற்று, குளிர்ச்சியான நீரோடை என சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த இடம் அமைந்துள்ளது.

கொல்லிமலை அடிவாரத்தில் புளியஞ்சோலை அமைந்துள்ளதால், இங்குள்ள நீரூற்றுகள் ஆண்டு முழுவதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.மேலும், பல மூலிகை மரங்களையும், செடிகளையும் கடந்து தண்ணீர் வருவதால், அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, இங்கு குளிக்கவும், குடும்பத்துடன் நேரம் செலவிட்டு மகிழவும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புளியஞ்சோலைக்கு வருகை தருவது வழக்கம்.

குறிப்பாக கோடை காலங்களில் வெம்மையில் இருந்து தப்பவும், குளிர்ச்சியான தண்ணீரில் நீராடவும், உள்ளூரில் இருந்து மட்டுமல்லாமல், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். புளியஞ்சோலை சுற்றுலாத்தலம் தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான பல அடிப்படை வசதிகள் இங்கு இல்லாமல் உள்ளது. குறிப்பாக, பெண்கள் உடை மாற்ற எந்த அறையும் இல்லை.

அதேபோல், புளியஞ்சோலை சுற்றுலாத்தலத்தில் குடிநீர் வசதியும், கழிப்பறை வசதியும் உரிய முறையில் செய்து தரப்படவில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர். குப்பைகள் சரிவர அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதாக கூறும் அவர்கள், நடைபாதைகளை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடைக்காலத்தில் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால், அதற்கு முன்பாகவே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், அங்குள்ள வியாபாரிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: PULIYANCHOLAItn tourismTouristTiruchytourist placeKOLLI HILL PULIYANCHOLAI
ShareTweetSendShare
Previous Post

13 வயது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கிறார் கிம் ஜாங் உன்?

Next Post

காரைக்கால் அமித் ஷா நிகழ்ச்சியில் தடையை மீறி பறந்த ட்ரோன் – பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்!

Related News

தவெக ஆட்சி முடியும்போது கடன் ரூ.15 லட்சம் கோடியாக இருக்கும்; அண்ணாமலை

இந்திய -பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : இந்தியாவுடன் கரம்கோர்க்கும் நாடுகள் – சிறப்பு தொகுப்பு!

இந்தியா வெறும் சந்தை மட்டுமல்ல, வளர்ச்சிக்கான ஒரு உந்துதளம் – நியூசிலாந்தில் பிரதமர் மோடி பேசியது என்ன? – சிறப்பு தொகுப்பு!

Operation Amistad : வெனிசுலாவில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தியாவின் மனிதாபிமானப் பேரிடர் மீட்புப் பணி – சிறப்பு தொகுப்பு!

பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க : ஜானகியின் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக ஈரான் மீண்டும் அறிவிப்பு : சைப்ரஸ் நாட்டு கப்பல் மீது தாக்குதல்!

FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் – அர்ஜென்டினா,இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

ரேசன் பொருள்கள் தொடர்பான புகார்களுக்கு விரைவில் வாட்ஸ் அப் எண்கள் – அமைச்சர் வெங்கடரமணன்

புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல – ஆளுநர் அர்லேகர்

ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட  இசையரசியின் மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

எஸ். ஜானகியின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – கர்நாடக அரசு அறிவிப்பு!

வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே – பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!

வியட்நாம் படகு விபத்து – தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழப்பு!

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies