காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
காதலர் தினத்தை பல்வேறு தரப்பினரும் கொண்டாடிய நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
மெரினாவில் உள்ள கன்னகி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் காதலர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில பொறுப்பாளர் சுசிலா தேவி, பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணமே சிறந்தது எனவும், காதலர் தினத்தை கொண்டாட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
இவர்களின் போராட்டத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
















