புதுக்கோட்டையில் இந்து அமைப்பின் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை நெருங்கிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த மோகன் என்பவர் இந்து அமைப்பின் நிர்வாகியாக இருந்து வந்த நிலையில் கடந்த 13ம் தேதி தனது வீட்டில் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனையறிந்த காவல்துறையினர் மோகனின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், குளித்தலையை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறிய மோகன் பணம் பெற்று மோசடி செய்ததாகவும், இதனால் அந்த நபர் மோகனை கொலை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கொலையாளியை நெருங்கி விட்டதாக தெரிவித்த காவல்துறையினர் விரைவில் கைது செய்துவிடுவோம் எனவும் தெரிவித்தனர்.
















